பல்லவி
த3ஸ1ரத2 நந்த3ன தா3னவ மர்த3ன
த3யயா மாம் பாஹி
சரணம்
சரணம் 1
1சாலுனு மாயா ஜாலமு ஸேய
ஜாலனு தோயஜாலய ராய (த3)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
த3ஸ1ரத2/ நந்த3ன/ தா3னவ/ மர்த3ன/
தசரதன்/ மைந்தா/ அரக்கரை/ யழித்தோனே/
த3யயா/ மாம்/ பாஹி/
தயவு செய்து/ என்னை/ காப்பாய்/
சரணம்
சரணம் 1
சாலுனு/ மாயா/ ஜாலமு/ ஸேய/
போதும்/ (உனது) மாயை/ தாமதம்/ செய்தால்/
ஜாலனு/ தோயஜ-ஆலய/ ராய/ (த3)
பொறுக்கமாட்டேன்/ மலரோன்/ மன்னா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - பொஞ்சி - பொங்கி. இந்த சரணத்தின் எதுகை மோனைகளை நோக்குகையில், 'பொஞ்சி' என்பதே சரியாகப்படுகின்றது. இச்சொல்லுக்கு 'கோள் கேட்டல்' என்று பொருள். அச்சொல், இதற்குமுன் வரும் 'வத3ருது3' (உளறினேன்) என்பதுடன் சேரவில்லை. எனவே, 'வத3ருது3 பொஞ்சி' என்பதற்கு, 'வீண் வம்பாடினேன்' என்று பொருள் கொள்ளப்பட்டது.
4 - க3ர்வமு - க3ர்வமுலு.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - சாலுனு மாயா ஜாலமு ஸேய ஜாலனு - இதனை 'சாலுனு+மாயா ஜாலமு ஸேய ஜாலனு' என்றோ 'சாலுனு மாயா+ஜாலமு ஸேய ஜாலனு' என்றோ 'சாலுனு மாயா ஜாலமு+ஸேய ஜாலனு' என்றோ பிரிக்கலாம். மூன்றாவதாகக் கூறப்பட்டது சரியில்லை. ஏனென்றால், 'ஸேய ஜாலனு' என்ற சொற்களின் பொருள் நிறைவுறவில்லை. புத்தகங்களில் 'மாயா ஜாலம்' என்பது இறைவனைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே முதலாவதாகக் கூறப்பட்டதுவும் பொருந்தாது. எனவே, இரண்டாவதாகக் கொடுக்கப்பட்ட 'சாலுனு மாயா+ஜாலமு ஸேய ஜாலனு' என்று பிரித்து பொருள் கொள்ளப்பட்டது.
Top
2 - ஜனுலதோ ஜேரி ஜெப்ப நீ தா3ரி - 'ஜெப்ப' (கூறவில்லை) என்ற சொல் எதிரிடையில் உள்ளது. அதன்படி, 'ஜனுலதோ' என்ற சொல்லுக்குப் பொருள் கொள்வது கடினமாக உள்ளது. 'ஜனுலு' என்பது 'பொதுமக்களை'க் குறிக்கும். 'நீ தா3ரி' என்பது 'பக்தி நெறி'யினைக் குறிக்கும். எனவே, முதலடியில் வரும் சொற்களுடன் சேர்த்து, 'பொதுமக்களுடன் சேர்ந்து உனது நெறி கூறவில்லை' என்று பொருள் கொள்ளலாம். அல்லது 'ஜனுலு' என்பதற்கு 'நன்மக்கள்' என்று பொருள் கொண்டு, 'நன்மக்களுடன் கூடி, உனது நெறி கூறவில்லை' என்று பொருள் கொள்ளலாம். மேலும், 'ஜெப்ப' என்ற சொல்லுக்கு, 'கூறவில்லை' என்ற பொருளும் சரியாகப் பொருந்தவில்லை. இவற்றினைக் கருத்தில் கொண்டு, முதலில் கூறியபடி, 'பொதுமக்களுடன் சேர்ந்து, உனது நெறி சென்றேனில்லை' என்று பொருள் கொள்ளப்பட்டது.
Top
மலரோன் - பிரமன்
உனது நெறி - பக்தி நெறி
கரையேற்றும் - பிறவிக் கடலிலிருந்து
Top